(ஆர்.யசி)
தூய்மையான அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் எமது பரந்த வேலைத்திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி, வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் மற்றும் மலையக கட்சிகளை ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரு மேடையில் ஒன்றிணைய முடியாது என்பது கட்சியின் தெளிவான நிலைப்பாடு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ராஜபக்ஷவினரின் அரசாங்கம் உருவாகியபோது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருந்த போதிலும் இன்று மக்களால் இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நாடு வீழ்ச்சி கண்டுள்ளது,மக்களால் நாளாந்த வாழ்கையை வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஒரு சில ஆண்டுகளில் நாடு மோசமான நெருக்கடி நிலைமையை சந்திக்கப்போகின்றது என்றஅச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த நிலைமைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பலர் எம்முடம் இணைந்துகொள்ள தயாராக உள்ளனர், ஆனால் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை, அவர்களின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தனி அரசாங்கமே உருவாக்கப்பட வேண்டும்.
இது நீண்டகால போராட்டமாக அமையாது, அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை அமைப்போம். அதுவே எமது இலக்கு. அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
எமது தலைவர் ஊழல்வாதியல்ல, எமது கட்சியின் உறுப்பினர்கள் தூய்மையானவர்கள். அதுமட்டுமல்ல நாம் தெளிவான கொள்கையை வகுத்துள்ளோம். மக்களுக்கு எம்மீது நம்பிக்கை உள்ளது. வெளிப்படையான விமர்சனம் இருந்தாலும் கூட எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாம் நேர்மையாக பேசுகின்றோம். உண்மையை கூறுகின்றோம். ஆனால் நாம் பல விடயங்களில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது.
இதில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் கட்சிகள், மலையக கட்சிகளுடன் எம்மால் இணைந்து செயற்பட முடியும். மக்கள் மத்தியில் இவர்கள் ஊழல் வாதிகள் என்றோ அல்லது சர்ச்சைக்குரிய தரப்பெனவோ விமர்சிக்கப்படுவதில்லை.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் பல தூய்மையான அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு பரந்த அணியாக பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும். தூய்மையான அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
ஆனால் ரணில், மைத்திரியுடன் இனி ஒருபோதும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாது. அது நடக்கவும் நடக்காது. இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல. கட்சியின் பொது நிலைப்பாடும் இதுவேயாகும். ஆகவே நல்லாட்சியை நாசமாக்கிய ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுடன் இனி ஒருபோதும் கூட்டணிக்கு நாம் தயாரில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM