அரசாங்கத்திற்குள் பங்காளி கட்சிகளுக்கு மதிப்பில்லை - திஸ்ஸ விதாரண

Published By: Vishnu

14 Dec, 2021 | 09:05 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்துடன் 11 பங்காளி கட்சிகள் கூட்டணியாக  ஒன்றினைந்துள்ளோம். இருப்பினும் எமது கருத்துக்களுக்கு அரசாங்கத்தில் மதிப்பில்லை. பங்காளி கட்சியின் தலைவர்களுக்கு முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளி கட்சி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த 'மக்கள் பேரவை'மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பும், கூட்டணியின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் கொள்கைக்கு முரனாக செயற்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களில் சுகாதார தரப்பினரது கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. கொவிட் தொடர்பிலான கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொற்றுநோய் தொடர்பில் சர்வதேசத்திற்கு ஆலோசனை வழங்கிய நான் புறக்கணிக்கப்பட்டேன்.

கொவிட் தாக்கத்தை தொடர்ந்து வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொவிட் தாக்கத்துடன் மக்கள் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்க்கொள்ள வேண்டிய  நெருக்கடியான சூழ்நிலை தோற்றம் பெற்றுள்ளது. கொவிட் தாக்கத்திற்கு பின்னர் பட்டினி மற்றும் ஏழ்மை உள்ளிட்ட பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி பணிகளை சற்று தாமதப்படுத்தி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து அக்கறை கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.

எமது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதை பெரு வேதனையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52