(எம்.ஆர்.எம்.வசீம்)
கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தங்களுக்கு தேவையான அரசியல் கையாட்களை நியமித்துக்கொள்ளவும் அரசாங்கத்தின் மோசடிகள் வெளியில் வராமல் தடுப்பதற்குமே ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
![]()
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியலமைப்பில் தனக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய பாராளுமன்ற அமர்வை நிறுத்தி வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் செயற்குழுக்களில் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு மற்றும் அரச கணக்குகள் பற்றிய (கோபா) குழு முக்கியமானதாகும்.
இந்த குழுக்களிலேயே ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போதைய பாராளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களில் பேராசிரியர் சரித்த ஹேரத் மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைவராக செயற்பட்டு வந்தனர்.
இவர்களின் தலைமையில் இந்த இரண்டு செயற்குழுவிலும் அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் கூடிய வகனம் செலுத்தப்பட்டிருந்தன.
இதுவரை இவர்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை அரசாங்கத்துக்கு நல்லதில்லை. இந்த நடவடிக்கையில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி உட்பட ராஜபக்ஷவினர், இதனை நிறுத்துவதற்காகவே பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.
அத்துடன் இந்த குழுக்களின் அறிக்கைகள் வெளியில் வந்தால், அது அரசாங்கத்தின் மோசடிகள் மக்களுக்கு தெரிந்துவிடும். தற்போது பாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த செயற்குழுக்களின் நடவடிக்கைகள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றன.
அதனால் பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென ஒத்துவைத்து, அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நாடகம் என்ன என்பது சிறு குழந்தைகளுக்கும் விளங்குகின்றது.
மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தலைவர்களை தெரிவு செய்யும் போது, ராஜபக்ஷவினரின் ஊழல் மோசடிகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு தேவையான முறையில் செயற்படும்
அரசியல் கையாட்களையே தெரிவு செய்துகொள்வார்கள். அதற்காகவே பாராளுமன்றத்தை மேலதிகமாக ஒருவாரத்துக்கு மாத்திரம் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM