(எம்.மனோசித்ரா)
ஒமிக்ரோன் பிறழ்வு உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.
அதற்கமைய கர்ப்பிணிகள் எவ்வித அச்சமும் இன்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒமிக்ரோன் பிறழ்வு உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.
இதன் மூலம் முதலாவதாக தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அத்தோடு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றமையால் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்பு குறைவாகும்.
காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வைரஸ் உடலிலிருந்து வெளிப்படுவதும் குறைவடையும். கர்ப்பிணிகளுக்கும் ஏற்கனவே முதல் இரு கட்ட தடுப்பூசிகளையும் வழங்கியதைப் போன்றே மூன்றாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்படும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கர்ப்பிணிகள் எவ்வித அச்சமும் இன்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM