(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றின் காரணமாக இதுவரையில் 60 கர்பிணிகளும் , 89 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
எனவே கொவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த இரு தரப்பினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையில் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாள் முதல் இதுவரையில் 10 500 கர்பிணிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் தொற்றுக்குள்ளான பெரும்பாலான கர்பிணிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 95 சதவீதமான கர்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் 30 வயதுக்கு மேற்பட்ட கர்பிணிகளுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
20 வயதுக்கு மேற்பட்ட கர்பிணிகளுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கான சுற்று நிரூபம் கிடைக்கப் பெற்ற பின்னர் அவர்களும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வாறிருப்பினும் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் கொவிட் தொற்றிலிருந்து 100 வீதம் பாதுகாப்பு பெற முடியாது என சமூக இடைவெளியைப் பேணல், சன நெறிசல் அதிகம் காணப்படும் இடங்களுக்கு செல்லாதிருத்தல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிப்பது அத்தியாவசியமானதாகும்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது அநாவசியமாக சிறுவர்களை அழைத்துச் செல்வதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம் 18 வயதுக்கு குறைவான 89 சிறுவர்கள் கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்தோடு பாடசாலைகளிலும் கொவிட் பரவல் கனிசமானவு அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகம் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM