எம்.மனோசித்ரா
போர் காலத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கஜபா என்ற கப்பல் தற்போது போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
71 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் கடற்படையின் முக்கிய கப்பலாக இந்த கஜபாகு கப்பல் காணப்படுவதாக அதன் கட்டளையதிகாரி கெப்டன் பி.சி.எம்.ஏ.டி.பெரேரா தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு - காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7 சிறப்பு கப்பல்கள் நங்கூரமிடப்பட்டு மக்களுக்கு காட்சியப்படுத்தப்பட்டன.
இதனை நாட்டு மக்களுக்கு விரிவாக அறியப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர் கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டு தெளிவுப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 'கஜபாகு' கப்பல் பிரதானமானதாகும்.
இக்கப்பல் யுத்த காலகட்டத்தில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
அத்தோடு கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கண்காணிப்புக்களிலும் இக்கப்பல் ஈடுப்படுத்தப்படுகிறது.
இந்தக் கப்பலில் 180 கடற்படையினரை அழைத்துச் செல்லக் கூடிய திறன் உடையதாகும்.
எனினும் தற்போது 140 கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு மாத காலத்திற்கு எவ்வித தடங்கலும் இன்றி கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவாறான வசதிகளை உள்ளடக்கியதாக இக்கப்பல் காணப்படுகிறது.
அதற்கமைய ஆழ்கடலில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி இக்கப்பல் ஊடாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என கட்டளையதிகாரி கெப்டன் பி.சி.எம்.ஏ.டி.பெரேரா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM