ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (10) அதிகாலை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியாவில் உள்ள தனது சக தலைவரின் துயரமான மறைவு குறித்து கேள்விப்பட்டு, ஊடகங்களுக்கும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் வெளியிட்ட விசேட இரங்கல் செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் புதன்கிழமை இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. இராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ் டாலின், இராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
அங்கு இன்று மாலை 4.00 மணிக்கு ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் திருமதி மதுலிகா ராவத்தின் உடல் ப்ரார் சதுக்கத்தில் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM