பிபின் ராவத்தின் இறுதி சடங்கில் பங்கேற்ற புதுடெல்லி பயணமானார் இராணுவ தளபதி

Published By: Vishnu

10 Dec, 2021 | 10:19 AM
image

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (10) அதிகாலை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். 

ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியாவில் உள்ள தனது சக தலைவரின் துயரமான மறைவு குறித்து கேள்விப்பட்டு, ஊடகங்களுக்கும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் வெளியிட்ட விசேட இரங்கல் செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் புதன்கிழமை இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. இராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

முதலமைச்சர் மு.க.ஸ் டாலின், இராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.

அங்கு இன்று மாலை 4.00 மணிக்கு ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் திருமதி மதுலிகா ராவத்தின் உடல் ப்ரார் சதுக்கத்தில் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50