(ஏ.என்.ஐ)
உலகளாவிய ஒழுங்குக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக அமைதி கலாச்சாரத்தை இந்தியா ஊக்குவிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைதி கலாச்சாரம் என்பது உள்ளடக்கிய மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கான உலகளாவிய ஒழுங்கின் முக்கிய மைல்கல்லாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின் கீழ், அமைதி கலாச்சாரத்தை மேம்படுத்துவது உலகளாவிய சொற்பொழிவாக விரிவடைந்துள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் அமைதி கலாச்சாரம் பற்றிய நிகழ்ச்சி நிரல் மூலம் இந்த அவதானிப்பு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
மனிதநேயம், பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் செய்தியை இந்தியா தொடர்ந்து பரப்பும்.
சகிப்பின்மை, வன்முறை மற்றும் பாகுபாடு போன்ற எதிர்மறை சக்திகளை ஒன்றாக எதிர்த்துப் போராடுவதற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வெளிநாடுகளில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு இந்தியா தொடர்ந்து தங்குமிடம் அளித்துள்ளது. இது ஒரு கலாச்சாரம் மட்டுமல்ல. ஒரு நாகரிகமும் ஆகும் என தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM