யாழ்/கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR)பணிப்பாளருமான சரவணையூர் விசு செல்வராசாவின் நெறிப்படுத்தலில் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளால் பாடசாலைக்கு 81 ஆயிரம் ரூபா செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
42 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் நீ்ண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு அறக்கட்டளையால் தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது.
அத்துடன் அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய போசனமும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் க.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான, செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், தலைவர் நா.தனேந்திரன், இணைப்பாளர் யோசேப், அறக்கட்டளையின் கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர், க.சசிகரன், அறக்கட்டளையின் பொருளாளர் கீர்த்தனா, உப செயலாளர் இ.சற்குருநாதன், உப தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஆலோசகர் இ.மயில்வாகனம், அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினர்களான வினோத் மற்றும் விது ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு குடிநீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததோடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மதிய போசனத்தையும் வழங்கி வைத்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM