திருகோணமலையில் தனியார் ஆடைத் தொழிற்சாலை பஸ் விபத்து ; 26 பேர் காயம்

Published By: Digital Desk 3

07 Dec, 2021 | 11:26 AM
image

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (07) காலை இடம் பெற்றுள்ளது. கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள  தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போது பஸ் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.

பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08