இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.
சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் தனது தொடக்க உரையில், கொவிட் -19 தொற்றுநோய்களின் போது கூட இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை. இரு தரப்புக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை வலுவடைந்து வருவதாகவும், ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் எங்கள் இரு நாடுகளும் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. நாங்கள் ஒத்துழைப்பது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் உணர்திறனையும் மனதில் வைத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரதமர் மோடியுடனான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பிற்காக டெல்லி வந்த விளாடிமிர் புடின், “இந்தியாவை ஒரு பெரிய சக்தியாகவும், நட்பு தேசமாகவும் நாங்கள் பார்க்கிறோம். நமது நாடுகளுக்கிடையேயான உறவுகள் தொடர்ந்தும் வளர்ந்து வருவதாகவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM