பாராளுமன்றத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து சபையிலிருந்து பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு

Published By: Digital Desk 4

05 Dec, 2021 | 01:51 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை பாராளுமன்றத்துக்கு வரமாட்டோம் என தெரிவித்து பிரதான எதிர்க்கட்சி சனிக்கிழமை (4) சபையில் இருந்து வெளி நடப்பு செய்தது.

இன்றும் நாளையுமே பாராளுமன்றம் கூடும் - காரணம் இதுதான் ! | Virakesari.lk

பாராளுமன்றத்தில்  நேற்று இடம்பெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சு,போக்குவரத்து அமைச்சு ,தொழில் அமைச்சு மற்றும் 3ராஜாங்க அமைச்சுகளுக்கான நிதிஒதுக்கீடுகள்  மீதான குழு நிலை விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்களால் ஆத்திரமடைந்து ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் சபைக்கு வெளியில் இருந்து தாக்க முயற்சித்துள்ளனர். அதனால் மதிய உணவு வேளைக்கு பிறகு மீண்டும் சபை ஆரம்பித்து சில நிமிடங்களில் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றுகையில் 5நிமிடம் மேலதிகமாக கேட்டபோது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர்  எமது பக்கம் வந்து உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தனர்.

என்றாலும் அந்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடி அதனை முடிவுக்கு காெண்டுவந்தோம். என்றாலும் நேற்று மீண்டும் மனுஷ் நாணயக்காரவின் உரையை அடுத்து, சபைக்கு வெளியில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 15,20 பேர்வரை தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.

இவ்வாறான நிலையில் எமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை எமக்கு பாராளுமன்றத்தில் இருக்கமுடியாது.

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கு பதிலளிப்பதே ஆளும் தரப்பின் பொறுப்பு. அதனை விடுத்து சபையில் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கு சண்டைக்கு வருவதாக இருந்தால் எமக்கு சபைக்கு வரமுடியாது.

பாராளுமன்ற சம்பிரதாயத்தை கடைப்பிக்கவேண்டும். அதனால் எமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வரை நாங்கள் பாராளுமன்றத்துக்கு வரமாட்டோம் என்றார்

இதன்போது எதிர்த்தரப்பு உறுப்பினர்களான ஜே.சி. அலவத்துகொட, நளின் பண்டார, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் தங்களது ஒழுங்கு பிரச்சினையின்போது, சபையில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு சபைக்கு வெளியில் தாக்குதல் நடத்த முயற்சிப்பதென்றால் அது பாரிய பிரச்சினை.

அதனால் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபைக்கு வரமுடியாது என தெரிவித்து பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43