குறிஞ்சாக்கேணி படகு விபத்து மரணம் 08 ஆக உயர்வு

Published By: Vishnu

05 Dec, 2021 | 09:09 AM
image

கடந்த 23.11.2021 அன்று ஏற்பட்ட குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எட்டாக உயர்ந்துள்ளது.

சக்கரையா ஹாலிஸா என்ற 40 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தவர் ஆவார்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்குண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், 12 நாட்களுக்குப் பின்னர் நேற்று இரவு 9:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதனால் குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.

குறித்த பால நிர்மாண வேலைகள் நடப்பதன் காரணமாக தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு பயன்படுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்தினர்.

இந்நிலையில் 23.11.2021 அன்று குறித்த படகு கவிழ்ந்ததில் 27 பேர்  நீரில் மூழ்கிய நிலையில் 6 பேர் உயிரிழந்தோடு, சிறுமி ஒருவர் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலிய வீரர்களுக்கான விசாக்களை நிராகரியுங்கள் ;...

2025-01-14 14:33:15
news-image

அமெரிக்கா அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது...

2025-01-14 14:29:52
news-image

துப்பாக்கி முனையில் யுவதியை கடத்திச் சென்ற...

2025-01-14 14:21:51
news-image

ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது...

2025-01-14 14:18:39
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:18:27
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01