சஹ்ரானின் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞன் கைது

Published By: Digital Desk 4

03 Dec, 2021 | 03:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹஷீம், தாக்குதலுக்கு முன்னர் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம்  பகுதியில் நடாத்திய பயிர்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Articles Tagged Under: கைது | Virakesari.lk

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் கண்டி மாவட்ட கிளை அலுவலக அதிகாரிகள் ஊடாக 25 வயதான குறித்த இளைஞன் கண்டி - ஹிங்குல பகுதியில் வைத்து கைது  நேற்று (2) மாலை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் விசாரணைகளில்  வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும்  கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்தி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம் இரகசிய முகாமில், சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சந்தேக நபர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதவி ஒத்தாசைகளை முன்னெடுத்தமை, தகவல்களை மறைத்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக சி.ரி.ஐ.டி.யின் சிறப்புக்குழுவினர், பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்; வழக்கு 09ஆம்...

2026-01-20 01:14:30
news-image

சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை...

2026-01-19 21:40:44
news-image

நாட்டின் உயர்ந்த வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவு

2026-01-19 23:51:05
news-image

மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது...

2026-01-19 21:39:57
news-image

அரசியலமைப்புச் சபைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம்...

2026-01-19 21:38:24
news-image

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு தொடர்பில்...

2026-01-19 21:36:32
news-image

23 ஆம் திகதி முதல் நாடுதழுவிய...

2026-01-19 22:07:44
news-image

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி!

2026-01-19 21:57:30
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு:...

2026-01-19 21:41:54
news-image

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில்...

2026-01-19 20:24:45
news-image

திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை வழக்கு:...

2026-01-19 20:22:31
news-image

மட்டக்களப்பில் புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல்:...

2026-01-19 17:26:54