(எம்.மனோசித்ரா)
அரச மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு இவ்வருட இறுதியில் வழங்கப்பட்ட விடுமுறை தினங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய இம்மாதம் 23 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2022 ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்த திகதியிலேயே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு தவிர்ந்த ஏனைய வகுப்புக்களுக்கு 2022 பெப்ரவரி 3 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 7 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு மாத்திரம் 2022 ஏப்ரல் 8 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
இதே போன்று நாடளாவிய ரீதியிலுள்ள இஸ்லாம் பாடசாலைகளுக்கு 2022 ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு மே மாதம் 4 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்.
அதற்கமைய 2021 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி ஆண்டு 2022 ஏப்ரல் 18 ஆம் திகதி நிறைவடைவதாக கல்வி அமைச்சு கடந்த வாரம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM