கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாட்டை முடக்குவது தீர்வல்ல - சுகாதார அமைச்சின் செயலாளர் 

Published By: Digital Desk 4

02 Dec, 2021 | 09:37 PM
image

 (ஆர்.யசி)

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்கினால் மக்களினதும், நாட்டினதும் வருமான வழிகளே இல்லாமல் போகும் எனவும்,  நாட்டை முடக்காது சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுப்பதே சிறந்ததாக இருக்குமெனவும்  சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகளவானோருக்கு சிகிச்சையளிக்கக் கூடிய கொரோனா-19 நிலையம்: சுகாதார அமைச்சு  தீர்மானம் | Virakesari.lk

ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை முடக்கினால் வைரஸை கட்டுப்படுத்த முடியுமென்று கூறினர். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நாட்டை மூடினோம்.இதனால்  தொற்றாளர் எண்ணிக்கை பூச்சியம் வரையில் குறைந்தாலும் திறந்த பின்னர் மீண்டும் அதிகரித்தது.

இதன்போது மீண்டும் மூடும் நிலை உருவானது. இவ்வாறு நாட்டை மூடும் போது மக்களின் வாழ்வாதரமே பாதிக்கப்படும். நாட்டை மூடியிருந்த போது மக்கள் தமது பிரச்சனைகளை கூறியுள்ளனர்.

அத்துடன் சுற்றுலாத்துறையை எடுத்துக்கொண்டால் அவர்களின் மூலம் மட்டுமே தொற்று ஏற்படவில்லை. இதனை விடவும் நாட்டுக்குள் வைரஸ் வருவதற்கான வழிகள் உள்ளன.

இதனால் சுற்றுலாத்துறையினர் வருவதை தடுப்பதன் மூலம் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்த முடியுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு இல்லை. சுற்றுலாப் பயணிகள் முறையாக சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இருந்தால் அவ்வாறான பிரச்சனை ஏற்படாது.

அதேபோன்று நோயை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை மூடி வருமான வழிகளை மூடுகின்றோம். மக்களுக்கு உணவுக்கு பணம், மருந்து கொள்வனவுக்கான பணம் இல்லாமல் போகும்.

அதன்படி அங்கு வரும் வருமானம் இங்கு இல்லாமல் போவதை பார்க்கும் போது இதனை நியாயப்படுத்த முடியுமாக இருக்கும். இதன்படி நாட்டை மூடாது ஒழுங்குவிதிகளை பின்பற்றி செய்தால் அனைத்தையும் முன்னெடுக்க முடியும் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33