பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவு : கற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுங்கள் - கிரியெல்ல

Published By: Gayathri

02 Dec, 2021 | 12:12 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கற்பதற்கு சந்தர்ப்பத்தை  ஏற்படுத்திக்கொடுக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கல்வி அமைச்சரிடம் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியில் பின்னடைவில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது.

இதனால் அவர்களுக்கு உயர்கல்வியை தொடரக் கூடிய வகையில் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். 

அறிவுப்பூர்வமாக இருப்பதாலேயே இவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். தேர்தலில் வெற்றிப் பெறுவது என்பது எந்தளவுக்கு கடினமானது என்று தெரியும்.

அத்துடன் 5 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும்போது எந்தளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி இருக்கும். இதனால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதிக்க முடியும்.  

இந்த பாராளுமன்றத்தில் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1970 காலப்பகுதியில் பரீட்சை இன்றி சட்டக் கல்லூரிக்கு நுழைய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அப்போதிருந்த பாராளுமன்ற செயலாளர் அதனை ஏற்படுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே மஹிந்த ராஜபக்‌ஷவும் சட்டக் கல்லூரி செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59