பெருந்தோட்டங்களில் வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயமுள்ளது - அரவிந்தகுமார்

Published By: Digital Desk 2

01 Dec, 2021 | 02:46 PM
image

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

பெருந்தோட்டங்களில் தேசிய மயப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஏனைய வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதென ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். அரவிந்தகுமார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மலையக தோட்டப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளை பொறுத்தவரை, முன்பெல்லாம் தோட்ட நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவ்வாறான நிலையொன்று இல்லை, இலாபத்தை கருத்தில் கொண்டு தோட்ட வைத்தியசாலைகளை கைவிடும் நிலைமையே காணப்படுகின்றது.

 ஒரு சில வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலையாக மாற்றினாலும் பல வைத்தியசாலைகள் கைவிடப்பட்டுள்ளன. ஆகவே சகல வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 

ஏற்கனவே தேசிய மயப்படுத்தப்பட்ட  வைத்தியசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஏனைய வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்னமும் அதன் தாக்கத்திற்கு முகங்கொடுத்து வருகின்றோம். சுகாதார தரப்பின் பங்களிப்புடன் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுத்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் வேளையில் நாம் ஆரோக்கியமான, பாதுகாப்பான நிலையிலும், நோயை கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலும் உள்ளோம் என்றே கூற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58