(எம்.மனோசித்ரா)
பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்த - சுதுன்பிட்டி பிரதேசத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மரணத்திற்கு சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு காரணமல்ல என்பது பொலிஸாரின் விசாரணகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்தோடு உயிரிழந்த பெண் அவரது கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக உடலில் தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த 13 ஆம் திகதி வெலிகந்த பொலிஸ் பிரிவில் சந்துன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த அயேஷh குமுதினி என்ற 19 வயது பெண் உடலில் தீப்பற்றிய காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
குறித்த பெண்ணின் உயிரிழப்பிற்கு எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , சம்பவம் இடம்பெற்ற தினத்தன்றும் அதற்கு முன்னரும் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த 13 ஆம் திகதி பெண்ணின் கனவன் தொழிலுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு காணொளி தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு , தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தான் தீமூட்டிக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கணவன் துரிதமாக வீட்டிற்குச் சென்ற போதிலும், பெண்ணில் உடலில் முழுமையாக தீப்பற்றி எரிந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு வீட்டிலிருந்த சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட வேறு எந்தவொரு பொருளிலும் தீப்பற்றிருக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலன்னறுவை ஸ்தள குற்ற விசாரணைப் பிரிவினரால் சம்பவம் இடம்பெற்ற இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனைகளிலும் குறித்த வீட்டில் எந்தவொரு வெடிப்பு சம்பவமும் இடம்பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
அதற்கமைய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சகல விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த மரணத்திற்கு சமையல் எரிவாயு கசிவு காரணமல்ல என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM