புத்தளத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு - அச்சத்தில் மக்கள் 

Published By: Digital Desk 4

28 Nov, 2021 | 09:58 PM
image

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ வைரன்கட்டுவ பிரதேசத்திலுள்ள ஓலை வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த சிறிய சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், கசிவு ஏற்பட்ட குறித்த சமையல் எரிவாயுவினால் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று 5.0 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த சிலிண்டரிலிருந்து கசிவுடன் தீப்பிடித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, உடன் செயற்பட்ட வீட்டார் அந்த சமையல் எரிவாயுவை உடனடியாக இழுத்தெடுத்துச் சென்று கழிவுநீருக்குள் வீசியுள்ளனர்.

இவ்வாறு செயற்பட்டமையினால் உயிர்ச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்கு சேதங்களோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04