தோட்டத்தொழிலாளர்களினதும் அவர்களது பிள்ளைகளினதும் பிறப்புச் சான்றிதழில் இந்தியத் தமிழர்கள் என்றே பதியப்படுகிறது. இவ்வாறான நிலையில் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் வெற்றியை பட்டாசு கொளுத்தி, கைதட்டி குதூகளித்து அவர்கள் மகிழ்ந்தால் அதனை தவறு என்று கூறுவதுசரியா என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.
மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை, வைத்தியசாலை, அடிப்படை சுகாதாரப் பிரச்சினை, அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஆகிய அனைத்திலும் இன்று வரை அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்த விஜித ஹேரத் எம்.பி. எதிர்க்கட்சியில் இருந்த போது குரல் கொடுத்து இன்று பொறுப்புள்ள அமைச்சர்களாக இருப்போர் தமது பொறுப்புக்களை செயற்படுத்துங்கள் என்றும் அமைச்சர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரைப் பார்த்துக் கூறினார்.
இதேவேளை, தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்த அவர் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தை திகாம்பரம் மன்றமாக மாற்றியமைக்கப்போகின்றீர்களா என்றும் அமைச்சர் திகாம்பரத்திடம் கேள்வி கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டக் கைத்தொழில், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி உள்ளிட்ட எட்டு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விஜித்தஹேரத் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படியானால் இந்த மோசடி தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வீர்களா? அல்லது தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தை திகாம்பரம் ஞாபகார்த்த மன்றமாக மாற்றியமைப்பதற்குத் திட்டம் உள்ளதா என்று கேட்கவிரும்புகிறேன்.
இதேவேளை தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் கூட்டு ஒப்பந்தம் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கான சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. எனினும் மேற்படி ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இன்று வரை அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அந்த மக்களுக்கான சம்பளத்தில் 5 சதமேனும் அதிகரிக்கப்படவில்லை.
தற்போது தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது.
எனினும் இலாபமீட்டும் போது எதுவும் கூறப்படுவதில்லை. தோட்டங்கள் நட்டத்தில் இயங்கும் பட்சத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். அதற்காகவே அரசாங்கம் உள்ளது. பொறுப்புள்ள அமைச்சுக்களும் இருக்கின்றன. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் அமைச்சுகளும், அரசாங்கமும் தவறியுள்ளதையே காணமுடிகிறது.
இன்று அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் தலவாக்கலையில் அமைச்சர் திகாம்பரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை உண்மையாகும்.
இன்று தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடோ, காணியோ கிடையாது. ஆனால் அண்மையில் சிலவீடுகளைக் கையளித்து ஊடகக் கண்காட்சி நடத்தப்பட்டது. ஆனால் அவர்களது குறைபாடுகள் தீர்க்கப்படவில்லை. அமரர் சந்திரசேகரன் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடு பெற்றுக் கொடுப்பதாகக்கூறி செயற்பட்ட போதும் அது பின்னாளில் போலியானதாகி விட்டது.
இது இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளர்களினதும் அவர்களது பிள்ளைகளினதும் பிறப்புச் சான்றிதழில் இந்தியத்தமிழர்கள் என்றே அவர்கள் பதியப்படுகின்றனர்.
இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டியொன்று நடந்து அதில் இந்திய அணி வெற்றிபெறும்பட்சத்தில் தமிழ் மக்கள் பட்டாசு கொளுத்தி கைதட்டி குதூகளிக்கின்றனர். இதனைப் பார்க்கின்ற சிங்களவர்கள் குறைப்பாடாக கூறுகின்றனர். தமிழ் மக்களின் பிறப்புச் சான்றிதழில் இந்திய தமிழர் என்று பதியப்படும் போது அவர்கள் இந்திய அணியின் வெற்றியில் குதூகளிப்பதில் தவறு இருக்க முடியுமா-?
இங்கு தவறுகள் அவர்களிடத்தில் இல்லை. நிர்வாக ரீதியிலேயே தவறுகள் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்படவேண்டும்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது தோட் டத் தொழிலாளர்களின் குறைகள் குறித்து பெரிதாக குரல் கொடுத்தவர்கள் இன்று அமைச்சர்களானதும் அமைதியாகிவிட் டனர்.
எனவே பொறுப்புள்ள அமைச்சர்கள் இவ்வாறான விடயங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
அனுராதபுரம், பொலன்னறுவையில் மாத்திரமே சிறு நீரகப்பிரச்சினை இருப் பதாக இங்கு யாரும் எண்ணிவிடக் கூடாது.
மலையகத்திலும் உள்ளது. அங்கு சுத்த மான குடிநீர் வசதி இன்மையாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் பண்டாரவளை, பூனாகலை போன்ற பிரதேசங்களிலும் சிறுநீரக நோயினால் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு அமிர்தலிங்கம் என்ற 60 வயது நபர் சிறுநீரக நோயினால் இறந்துள்ளார். அதேபோன்று தியாகராஜா என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலை யில் கடந்த 6 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM