கொடேகே தேசிய சாகித்திய விருதை பெறும் மல்லிகை சி.குமாரின் வேடத்தனம் 

Published By: Digital Desk 2

25 Nov, 2021 | 02:56 PM
image

மலையகத்தின்  மக்கள் எழுத்தாளர் கலாபூசணம் மல்லிகை சி.குமார்  எழுதிய நூல் 23ஆவது கொடகே தேசிய சாகித்திய விருதை பெறவுள்ளது.

2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த சிறுகதைத் தொகுப்புகளில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த  சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக மல்லிகை சி.குமாரின் “ வேடத்தனம் ‘ தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.

மலையக மண்வாசனை சொட்ட அம்மக்களின் வாழ்வியலை தன் படைப்பிலக்கியத்தின் ஊடாக பறைசாற்றி நின்ற கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் தனது சிறுகதைகள் கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தது மட்டுமின்றி பிழைப்புவாத அரசியலை எள்ளி நகையாடி சமூக விடுதலையை வலியுறுத்தி வந்துள்ளார். 

அந்தவகையில் அவரது மாடும் வீடும் , மனுஷியம் ஆகிய  மக்களுக்கான இலக்கிய படைப்புகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவரது வேடத்தனம் நூல் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தநிலையில் ஜனவரி மாதம்  27ஆம் திகதி எதிர்பாராத நிலையில் இயற்கை எய்தினர். 

இந்நிலையில் அவரது இறுதி நிகழ்வின் போது இந்த வேடத்தனம் சிறுகதை நூல் வெளியீடு செய்யப்பட்டது. இலக்கியவாதிகளான மு.சிவலிங்கம் மேமன் கவி, பொன்னுதுரை உள்ளிட்டவர்கள்  அந்த நெகிழ்ச்சியரமான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்நிலையில் இவ்வருடம்  சிறந்த சிறகதை தொகுப்புக்கான கொடேகே சாகித்திய விருதை  மல்லிகை சிகுமாரின்  வேடத்தனம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அலை கலை வட்ட இளைஞர்...

2025-04-19 10:02:50
news-image

பங்குனி உத்தர நாயகி போற்றி....!

2025-04-04 16:54:50
news-image

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108...

2025-04-10 16:32:08
news-image

கம்பளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பங்குனித் திங்கள்...

2025-04-06 12:33:39
news-image

பங்குனி உத்தரத்திருநாளின் தெய்வீக சிறப்புகள்...!

2025-04-04 10:18:30
news-image

ஹப்புகஸ்தென்ன அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-29 14:32:37
news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08
news-image

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள்...

2025-02-22 11:53:38