நல்லாட்சியில் மாகாணசபை தேர்தலை நடத்தாமைக்கு நாமும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் - சிறீதரன் 

Published By: Digital Desk 4

24 Nov, 2021 | 10:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றோம். 

கொரோனா பரவல் குறித்த உண்மை நிலைமையை அரசாங்கம் மூடி மறைக்கின்றது: சிறிதரன் |  Virakesari.lk

எமது பக்கமுள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் நாம் செய்த அதே தவறையும் நீங்கள் செய்வதற்கா ஆட்சிக்கு வந்தீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  முன்னிலையில் தமிழ் தேசியயக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  கூறுகையில்,

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ,தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் ஒரு திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் எதுவும் நடத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளதாக  ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.  மாகாணசபை தேர்தலை கடந்த அரசாங்கம்  நடத்தவில்லை. அந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றேன்.

அது எங்கள் பக்கம் உள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றேன் .அந்த அரசாங்கம் விட்ட தவறை நீங்களும் விடப்போகின்றீர்களா? கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரு வருடங்கள் முடிந்து விட்டன. பிரதமரின் காலம் ஒரு வருடம் முடிந்து விட்டது. நாங்கள்  விட்ட தவறை நீங்களும் செய்வதென்றால் எங்களைப்  போன்று தானே நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்த மாகாணசபை தேர்தல்களை நடத்தலாமே, அதற்கு ஏன் பின்வாங்குகின்றீர்கள்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46