கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Published By: Gayathri

24 Nov, 2021 | 04:50 PM
image

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற கடல் வழிப்பாதைப் பயணத்தில் ஆறு உயிர்களைக் காவு கொண்டதன் எதிரொலியாக இன்று (24.11.2021) காலை 7.00  மணிக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதனால் குறிஞ்சாக்கேணி பிராதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டது. பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக தற்காலிகமாக குறித்த பஸ் சேவை போடப்பட்டது.

குறித்த பஸ் சேவை காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, கச்சக்கொடித்தீவு ஊடாக கிண்ணியாவை சென்றடைவதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “இந்த பஸ் சேவையை ஆறு உயிர்களை பறிகொடுத்ததன் பின்னரா போட வேண்டும், இதற்கு முன்னரே சேவையில் ஈடுபடுத்தியிருக்கலாமே” எனக் கூறி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் பஸ் பயணம் செய்ய முடியாமலிருக்க, பஸ்ஸிக்கு முன்னர் கற்களை இட்டு தடைப்படுத்தி இருந்தனர்.

இதனால் காக்காமுனையிலிருந்து பாடசாலை செல்வதற்காக சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிஞ்சாக்கேணியில் இறக்கப்பட்டனர்.

இவ்வாறு இறக்கப்பட்ட மாணவர்களில் ஒரு சிலர் வீடு திரும்பினர். சில மாணவர்கள் வேறு மார்க்கத்தினூடாக பாடசாலைக்குச் சென்றனர்.

சம்பவ இடத்திற்கு கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் வருகை தந்தனர்.

எதிர்ப்பாளர்களிடம் பேசிக் கலந்துரையாடி, எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து எதிர்ப்பு கைவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45