logo

படகு சேவைக்கு கிண்ணியா நகர சபையே அனுமதி வழங்கியது - நிமல் லன்சா

24 Nov, 2021 | 09:52 AM
image

(எம்.மனோசித்ரா)

கிண்ணியா - குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் ஆதரவுடனான கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

எனவே இதனால் ஏற்பட்டுள்ள விபரீதத்தின் அரச தரப்பின் மீது சுமத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடுத்துள்ள முயற்சியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும்  இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை திருகோணமலை மாவட்டம் , கிண்ணியா பகுதியில் குறிஞ்சங்கேணி களப்பில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரழந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம்  இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அங்கு பாலத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டிய போதிலும் இதுவரையில் நிர்மாணப்பணிகள் முழுமையடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் என்ற ரீதியில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். குறித்த படகு பயணித்தமைக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

நீண்ட காலமாக குறித்த களப்பின் ஊடாக பாலமொன்று நிர்மாணிக்கப்படவில்லை என்பதோடு , அதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வாக எமது அரசாங்கத்தினால் குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை துரிதமாக நிறைவு செய்வோம்.

பாதுகாப்பற்ற முறையில் இந்த படகினைப் பயன்படுத்துவதற்கு நகரசபை அனுமதியளித்துள்ளமையே இந்த அசம்பாவிதத்திற்கான காரணமாகும். 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது எதிர்காலத்தில் சரியான நியமங்களுக்கு அமைவாக குறித்த களப்பின் ஊடாக பயணிகள் போக்குவரத்து முறையை வழங்கவுள்ளது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொபைல்போன் பாவனையாளர்களிற்கு ஒரு இனிப்பான செய்தி...

2023-06-10 17:25:02
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33