பாடசாலைக்குள் பிரவேசிக்கும் தாய்மார்கள் சேலை அணிந்து செல்வது கட்டாயமல்ல

Published By: Robert

26 Sep, 2016 | 10:27 AM
image

பாட­சாலை ஒழுங்கு விதி­மு­றை­க­ளுக்­க­மை­வாக எந்­த­வொரு ஆடை­யையும் அணிந்­து ­கொண்டு பாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு பெற்­றோருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்­பி­லான சுற்­று­நி­ரூபம் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

மஹவ கஜபா வித்­தி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிக்கும் பெற்­றோர் அணி­ய­வேண்­டிய ஆடைகள் தொடர்பில் சில பாட­சா­லைகள் வெளி­யிட்­டுள்ள அறி­வித்­த­லினால் வேலைக்குச் செல்லும் பெற்­றோர் இடை­யூ­று­களை எதிர்­கொள்­கின்­றனர். சில பாட­சா­லைகள் தாய்­மார் பாட­சா­லை­க­ளுக்குள் பிர­வே­சிப்­ப­தாயின் சேலை அல்­லது பொருத்­த­மான ஆடைகள் அணி­வ­தனை கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளனர்.

அந்த அறி­வித்­த­லினால் தலை­நகர் மற்றும் நக­ரங்­களில் தொழில் புரியும் பெண்கள் தமது பிள்­ளை­களை பாட­சா­லைக்குள் அழைத்துச் செல்­ல ­மு­டி­யாது நுழை­வா­யி­லுடன் திரும்­ப­ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் வேலை நேரத்தில் பாட­சா­லை­களில் நடை­பெறும் கூட்­டங்­களில் கலந்து கொள்­வ­திலும் தாய்­மார் சிக்­கல்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

எனவே குறித்த விதி­முறை தொடர்பில் பெற்­றோர் தொடர்ச்­சி­யாக அதி­ருப்தி தெரி­வித்து வந்­த­துடன் சிலர் தமது உரிமை மீறப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அது தொடர்பாக பரிசீலனை செய்து பாடசாலை வளாகத்திற்குள் நுழையும் பெற்றோரின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22