பாடசாலை ஒழுங்கு விதிமுறைகளுக்கமைவாக எந்தவொரு ஆடையையும் அணிந்து கொண்டு பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பெற்றோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அது தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மஹவ கஜபா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பெற்றோர் அணியவேண்டிய ஆடைகள் தொடர்பில் சில பாடசாலைகள் வெளியிட்டுள்ள அறிவித்தலினால் வேலைக்குச் செல்லும் பெற்றோர் இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். சில பாடசாலைகள் தாய்மார் பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அல்லது பொருத்தமான ஆடைகள் அணிவதனை கட்டாயமாக்கியுள்ளனர்.
அந்த அறிவித்தலினால் தலைநகர் மற்றும் நகரங்களில் தொழில் புரியும் பெண்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்குள் அழைத்துச் செல்ல முடியாது நுழைவாயிலுடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேலை நேரத்தில் பாடசாலைகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் தாய்மார் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே குறித்த விதிமுறை தொடர்பில் பெற்றோர் தொடர்ச்சியாக அதிருப்தி தெரிவித்து வந்ததுடன் சிலர் தமது உரிமை மீறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அது தொடர்பாக பரிசீலனை செய்து பாடசாலை வளாகத்திற்குள் நுழையும் பெற்றோரின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM