ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரிஷாத், ஹகீம் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஆரோக்கியமான அரசியல் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடாக நாம் பயணிக்க வேண்டும் என்றால், நாட்டுக்கு பொருத்தமான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். எவரும் வெளி இனத்தவர் அல்ல, தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாட்டவர். இலங்கையர்.
ஆகவே இலங்கையர் என்ற உணர்வுடன் சிந்திக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது கடமையை நிறைவேற்றுவோம். தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.
ஜே.வி.பியையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசியல் வெற்றிடத்தில் ஜே.வி.பிக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதனையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM