துபாயிலிருந்து நெவில் அன்தனி
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி றக்பி மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஆசிய அணிக்கு எழுவர் றக்பியின் லீக் சுற்றில் இலங்கை ஆண்கள் அணி சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
பெண்கள் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் மற்றைய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக இந்த இரண்டு அணிகளும் தத்தமது குழுக்களில் கடைசி இடங்களைப் பெற்று கோப்பைக்கான இறுதிச் சுற்றில் விளையாடவுள்ளன.
இலங்கை ஆண்கள் அணி தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானுக்கு பலத்த சவாலாக விளங்கி 14 - 31 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
அப் போட்டியில் இலங்கை விளையாடிய விதத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம், சீனா ஆகிய நாடுகளுக்கும் சவாலாக விளங்கி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை தோல்விகளையே தழுவியது.
ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் இலங்கை 7 - 29 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
இலங்கை சார்பாக சச்சித் சில்வா ட்ரை ஒன்றை வைத்ததுடன் அதற்கான மேலதிகப் புள்ளிகளை அஜித் ஹெட்டிஆராச்சி பெற்றுக்கொடுத்தார்.
சீனாவுடனான கடைசிப் போட்டியிலும் இலங்கைக்கு தோல்வியே கிட்டியது. அப் போட்டியில் இலங்கை 0 - 32 என படுதோல்வி அடைந்தது.
பெண்கள் பிரிவில் மலேசியாவுடனான போட்டியில் திறமையாக விளையாடி 12 - 10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை மற்றைய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.
சீனாவிடம் 0 - 47 என்ற புள்ளிகள் கணக்கிலும் ஹொங் கொங்கிடம் 5 - 38 என்ற புள்ளிகள் கணக்கிலும் இலங்கை படுதோல்விகளைத் தழுவியது.
ஹொங் கொங்குடனான போட்டியில் இலங்கை சார்பாக இந்தப் போட்டி முடிவுகளின் பிரகாரம் இலங்கையின் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் கோப்பை பிரிவுக்கான அரை இறுதிகளில் பிலிப்பைன்ஸின் ஆண்கள் அணியையும் பெண்கள் அணியையும் இன்று எதிர்த்தாடவுள்ளன.
இலங்கை அணியின் இத் தோல்விகளுக்கு போதிய போட்டிகளும் பயிற்சிகளும் இன்மையே காரணமாகும். இலங்கை அணிகள் கடந்த ஒரு மாதமே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. ஆனால், மற்றைய நாடுகள் கடந்த பல மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபட்டுவந்ததை அந்தந்த அணிகளின் முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM