அரசாங்கம் எம்மை அரசியல் ரீதியாக வளர்த்ததெடுக்க வேண்டும் - சிவநேசத்துரை சந்திரகாந்தன் 

Published By: Digital Desk 4

20 Nov, 2021 | 12:08 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடும் போக்கானவர்களுக்கு தீனி போடும் வகையில் அரசாங்கம்  நிர்வாகம் செயற்படக்கூடாது

அரசாங்கத்துடன் இணந்து எமது மக்களுக்காக செயற்படுகின்றேன். எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்ததெடுக்க வேண்டும்.

கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகிற அளவிலே அரசாங்கம்  நிர்வாகம் செயற்படக்கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.

Articles Tagged Under: Sivanesathurai Chandrakanthan | Virakesari.lk

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19),  வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம்  நாள் விவாதத்தில்  உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

 நான் பாராளுமன்றத்துக்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. ஆனால் எமது மக்களின் பிரச்சினைகளை ,எங்களது கருத்துக்களை இந்த சபையில் கூற முடியாதளவுக்கு எமக்கான நேரம் மட்டுப்படுத்தப்படுகின்றது.

நான் இங்கு பல விடயங்களை பேச வேண்டி உள்ளபோதும் அதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பொறுப்பை பாராளுமன்றத்தை வழிநடத்துபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பாராளுமன்றத்தில் வடக்கு,கிழக்கை மையப்படுத்தும் எம்.பி.க்கள் எல்லோரும் கடும் போக்கான தொனியில் தான் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

என்னைப்பொறுத்தவரையில் நான் நோட்டிஸ் ஒட்டி,  முதலமைச்சராகி இன்று எம்.பி.யாகவுள்ளேன். அரசாங்கத்துடன் தான் இணந்து செயற்படுகின்றேன். எனவே அரசாங்கம் எங்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்த கடும் போக்கானவர்களுக்கு தீனி போடுகிற அளவிலே அரச  நிர்வாகம் செயற்படக்கூடாது.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள எங்களின் தனித்துவமான அரசியலை வளர்த்தெடுக்கக்கூடிய சூழலை அரசாங்கம்  உருவாக்கித்தர வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பாடசாலையொன்றில் சிவலிங்கத்தை அகற்றியதற்கு எதிராக...

2026-01-25 12:03:42
news-image

பெரகல வனப்பகுதியில் பெண் கொலை :...

2026-01-25 11:58:42
news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 12:04:52
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40