(எம்.ஆர்.எம்.வசீம்)
போக்குவரத்தின்போது ஏற்படுகின்ற தவறுகள் தொடர்பான தண்டப்பணம் தவறு இடம்பெற்ற இடத்திலேயே செலுத்துவதற்கு முடியுமான வகையில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போக்குவரத்தின்போது ஏற்படுகின்ற தவறுகளுக்கான தண்டப்பணம் ஒன்லைன் ஊடாக செலுத்துதல் மற்றும் அதுதொடர்பான சட்ட திட்டங்களை ஒழுங்கு செய்வது தொடர்பான கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது.
நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் சட்டமா அதிபர் சன்ஜய ராஜரத்னம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது போக்குவரத்தின்போது வாகனங்களால் இடம்பெறும் தவறுகள் தொடர்பாக தண்டப்பணம் செலுத்தும்போது தற்போது நடைமுறையில் இருக்கும் முறைமை தொடர்பாக ஆராய்ந்து புதிய முறைமை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் புதிய முறைமையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைச்சர் சரத் வீரசேகரவின் கண்காணிப்பில் தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கி, மக்கள் வங்கி, இலங்கை தடை நீக்கல் நிறுவனம் மற்றும் இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
அத்துடன் இந்த குழுவின் பரிந்துரை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழங்கவேண்டும் என்பதுடன் அதன்பின்னர் குறித்த பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய சட்ட இயற்றுதல் மற்றும் தொழிநுட்பத்தை பயன்டுப்படுத்துவதும் முறை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய முறைமை ஆரம்பமாக அதிவேக பாதைகளில் மேற்கொள்ளவும் அதன் பின்னர் ஏனைய வீதிகளுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்தவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM