போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை செலுத்த புதிய சட்ட ஏற்பாடு

Published By: Gayathri

18 Nov, 2021 | 08:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

போக்குவரத்தின்போது ஏற்படுகின்ற தவறுகள் தொடர்பான தண்டப்பணம் தவறு இடம்பெற்ற இடத்திலேயே செலுத்துவதற்கு முடியுமான வகையில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போக்குவரத்தின்போது ஏற்படுகின்ற தவறுகளுக்கான தண்டப்பணம் ஒன்லைன் ஊடாக செலுத்துதல் மற்றும் அதுதொடர்பான சட்ட திட்டங்களை ஒழுங்கு செய்வது தொடர்பான கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது. 

நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் சட்டமா அதிபர் சன்ஜய ராஜரத்னம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது போக்குவரத்தின்போது வாகனங்களால் இடம்பெறும் தவறுகள் தொடர்பாக தண்டப்பணம் செலுத்தும்போது தற்போது நடைமுறையில் இருக்கும் முறைமை தொடர்பாக ஆராய்ந்து புதிய முறைமை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக  கவனம் செலுத்தப்பட்டது. 

அத்துடன் புதிய முறைமையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக  போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைச்சர் சரத் வீரசேகரவின் கண்காணிப்பில் தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கி, மக்கள் வங்கி, இலங்கை தடை நீக்கல் நிறுவனம் மற்றும் இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

அத்துடன் இந்த குழுவின் பரிந்துரை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழங்கவேண்டும் என்பதுடன் அதன்பின்னர் குறித்த பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய சட்ட இயற்றுதல் மற்றும் தொழிநுட்பத்தை பயன்டுப்படுத்துவதும் முறை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த புதிய முறைமை ஆரம்பமாக அதிவேக பாதைகளில் மேற்கொள்ளவும் அதன் பின்னர் ஏனைய வீதிகளுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்தவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் 20 சிறைக்கைதிகள் விடுதலை !

2025-05-12 11:26:09
news-image

ஹெலிகொப்டர் விபத்து ; நீதிமன்றம் பிறப்பித்த...

2025-05-12 11:38:39
news-image

வவுனியாவில் 7 சிறைக்கைதிகள் விடுதலை

2025-05-12 11:24:19
news-image

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் பார்வையிட்டார்...

2025-05-12 11:52:47
news-image

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

2025-05-12 11:32:34
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி உயிரிழப்பு!

2025-05-12 10:50:49
news-image

புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு –...

2025-05-12 11:31:49
news-image

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி ; நாம்...

2025-05-12 11:00:58
news-image

இரு பஸ்கள் மோதி விபத்து ;...

2025-05-12 10:32:44
news-image

அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொடூரமாக கொலை...

2025-05-12 10:20:00
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும்...

2025-05-12 10:16:51
news-image

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

2025-05-12 10:08:42