அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் 6 முதல் 9 வகுப்புகள் 22 ஆம் திகதி ஆரம்பம் - கல்வி அமைச்சின் செயலாளர்

Published By: Gayathri

16 Nov, 2021 | 09:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் 6,7,8 மற்றும் 9 ஆகிய தரங்களின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கபடமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கும், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்கும் நடவடிக்கை கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. 

200 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களை உள்ளடக்கிய ஆரம்ப பிரிவு மாணவர்கள் உள்ள பாடசாலைகள் கடந்த 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

200இற்கும் அதிகமான மாணவர்கள் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய 6,7,8 மற்றும் 9ஆம் தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்களுக்கு அமைய ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படமாட்டாது.

இவ்வாண்டுக்கான தேசிய பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரம் மற்றும் சாதாரன பரீட்சைகளுக்கு தயாராகுவதற்கு பரீட்சாத்திகளுக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே பாடத்திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவை கிடையாது.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரையில் சுமார் 10 இலட்சம் மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01