(எம்.மனோசித்ரா)
இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்யா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர், வெளிப்படையானதும் முன்கணிப்பிடக் கூடியதுமான சுங்க நடவடிக்கை முறைகள் ஊடாக சட்ட ரீதியான வணிக நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இருதரப்பினருக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் செலவுகளைக் குறைத்தல், தேச எல்லைகள் உள்ளிட்ட வரிகளை சரியான வகையில் கணிப்பிடல் மற்றும் சேகரித்தல், மட்டுப்பாடுகளின் கீழ் பண்டங்களை பரிமாற்றிக் கொள்வதை கட்டுப்படுத்தல், தடுத்தல் மற்றும் அதற்குரிய ஒழுங்குவிதிகளை வகுத்தல் போன்றவற்றுக்காக இவ் ஒப்பந்தம் பங்களிப்புச் செய்யும். அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இருதரப்பினருக்கிடையே கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM