(எம்.மனோசித்ரா)
அரசியல் தீர்மானங்களுக்காக விருப்பத்தின் பேரில் அரச சேவையில் உத்தியோகத்தர்கன் குவிக்கப்பட்டுள்ளமை பாரிய குறைபாடாகும் என்பதை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
மாறாக அரச உத்தியோகத்தர்களை சுமையென்று கூறவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை(16) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரச உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு சுமை என்று கூறவில்லை. '
அரசியல் தீர்மானங்களுக்காக விருப்பத்தின் பேரில் அரச சேவையில் உத்தியோகத்தர்கன் குவிக்கப்பட்டுள்ளனர்' என்பதையே நிதி அமைச்சர் தெரிவித்தார்.
இது ஒவ்வொரு அரசாங்கத்திலும் காணப்படும் பாரிய குறைபாடாகும். எனவேதான் அரச நிறுவனங்கள் சில நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.
கோப் அறிக்கைகள் ஊடாக இதனை தெளிவாக அவதானிக்கலாம். இந்த சுமையைப் பற்றியே நிதி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வழங்குவதே இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் காணப்பட்ட பாரிய சிக்கலாகும்.
உண்மையில் இதனை சம்பள அதிகரிப்பு என்று கூற முடியாது. எவ்வாறிருப்பினும் பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே இந்த வரலாற்று குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிதி நெருக்கடிகள் சீராகும்போது அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM