சீன உரக்கப்பலால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அரசாங்கம்

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 05:02 PM
image

(எம்.மனோசித்ரா)

சீன உரக்கப்பலால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அக்கப்பலில் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாகவோ இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை.

நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளமையின் காரணமாகவே சீனக்கப்பல் திரும்பிச் செல்லாமலுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமனம் | Virakesari.lk

செவ்வாய்கிழமை (16)  இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களாக டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கையில் ,

சீன இரசாயன உரக்கப்பல் பிரச்சினையால் இலங்கை - சீனாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர முரண்பாடும் ஏற்படாது. இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் மிகவும் தெளிவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எனினும் நாம் கடன் சான்று பத்திரத்தை விடுவித்துள்ளமையால் இவ்விடயத்தில் தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த சிக்கலுக்கான தீர்வு காணப்படும் வரை மாத்திரமே கப்பல் இலங்கையில் தரித்துள்ளதே தவிர , வேறெந்த நோக்கத்திற்காகவும் கிடையாது.

குறித்த உரத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெறப்போவதில்லை என்றும் விவசாயத்துறை அமைச்சர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு ஆயுதக் கப்பல் இல்லை என்பதால் அச்சுறுத்தல் எதுவும் கிடையாது என்றார்.

இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,

இவ்விடயம் தொடர்பில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் கடன்சான்று பத்திரத்தை விடுவித்துள்ளமையால் உரத்தினை பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அந்த நிறுவனம் உள்ளது.

அதே போன்று விவசாயத்துறை அமைச்சு அதனை பொறுப்பேற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளது.

இரு தரப்பும் தமது நிலைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளன. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் இலங்கையில் தரித்திருக்கலாம் என்ற நிலைப்பாட்டில் அந்நிறுவனம் கப்பலை மீள வரவழைக்காதிருக்கலாம்.

கப்பலை திரும்பி செல்லுமாறு தீர்ப்பு வரக்கூடும் என்று நாம் எதிர்பார்ப்பதைப் போலவே, அதற்கு எதிர்மாறான தீர்ப்பை அந்நிறுவனம் எதிர்பார்த்திருக்கலாம்.

எவ்வாறிருப்பினும் இந்த கப்பல் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. உரம் கசிவடைந்து கடற்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவோ , கப்பலுக்குள் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாகவோ இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:24:56
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36