காணாமல் போன சிறுமிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

Published By: Digital Desk 3

16 Nov, 2021 | 11:51 AM
image

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மார்டின் குறுக்கு வீதி கொழும்பு 12 சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் பல்வேறு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர். 13 வயதான பாத்திமா மர்யம், 14 வயதான பாத்திமா கதீஜா, 15 வயதான பாத்திமா ரஷா ஆகியோரே இவ்வாறு காணாமல் போனதாக சிறுமிகளின் தாயரான மொஹமட் பாரிஸ் பாத்திமா நஸ்ரினா புகார் அளித்திருந்தார். 14,15 வயதான சிறுமிகள் தனது மகள் எனவும் 13 வயதான சிறுமி தனது அக்காவின் மகள் எனவும் புகாரில் கூறப்பட்டடுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாராணையை மேற்கொண்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹாஸ் தல்துவ காணாமல் போன மூன்று சிறுமிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பியாதக தெரிவித்துள்ளார். இவ் விசாரணையில் மூன்று சிறுமிகளும் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இவ் விசாராணையின் அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு 12ஜச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் 42 மணி நேரத்தின் பின்னர்  வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுமிகளும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நடனம் மற்றும் இசை பயில்வதற்கான ஆசையில் வீட்டை விட்டு இவ்வாறாக வெளியேறினாதாக பொலிஸாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அம் மூவரும் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சட்ட மருத்துவ அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் சிறுமிகளுக்கு எந்தவித உடல், உள ரீதியான பாதிப்புக்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டடுள்ளது. 

அத்துடன் வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி பிராதான பொலிஸ் பரிசோதகர் பமுனு ஆராச்சி, சிறு முறைப்பாட்டின் பொறுப்பாதிகாரி ரத்ன குமார, குற்ற விசாரணை பிரிவு பொறுப்பாதிகாரி உடுவெல்ல மற்றும் பிராதான பொலிஸ் பரிசோதகர் ஜி.பி. ரம்யசிறி ஆகியோர் உள்ளடங்கிய விஷேட குழுவினர் ஊடாக இந்த விசாராணைகள் ஆரம்பிக்கப்பட்டன, அத்துடன் மத்திய சிறுவர் மற்றும் மகளிர் விசாராணை பிரிவும் விசாரணையில் இணைந்தது.

 இந்நிலையில் சி.சி.ரி.வி கானோளிகளை ஆராய்ந்து பார்த்ததில் குறித்த சிறுமிகள் 8ஆம் திகதி முற்பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அருகிலுள்ள உணவகம் ஒன்றிக்கு சென்று உணவு அருந்தியமை தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமிகளின் கைகளில் இருந்த தாயாரின் கையடக்க தொலைப்பேசியை ஜி.பி.எஸ். தொழிநுட்பம் ஊடாக பின் தொடர்ந்து தேடிய போது 8 ஆம் திகதி காலி முகத்திடலில் இருந்தமை தெரியவந்ததுடன் அதன் பின்னர் அவர்களது கையடக்க தொலைப்பேசி செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அதன் பின்பு  சிறுமிகளின் கைகளில் 1,800 ரூபா மட்டுமே பணம் இருந்துள்ளது. எனவே தாங்கள் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் வரை நிறையுடைய இரு மோதிரங்களை அடகு வைத்துள்ளனர். அதனூடாக 60 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் தமக்கு தேவையான ஜீன்ஸ் ரீ-சேட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அத்துடன் ஆடைகளை கொள்வனவு செய்த சிறுமிகள் அவ்க ஆடைகளை அணிந்தவாறு வத்தளை பகுதிக்குச் சென்று அங்குள்ள நடன வகுப்பொன்றில் சேர முயற்சித்துள்ளனர். 

எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் அநுராதபுரம் சென்றுள்ளனர். அநுராதபுர பஸ் நிலையத்தில் சிறுமிகளின் பின்னால் இளைஞர் குழுவொன்று வட்டமிடுதலை கண்ட பஸ் சாரதி ஒருவர் சிறுமிகளிடம் தாம் செல்ல வேண்டிய இடம் தொடர்பில் விசாரித்துள்ளார்

இதனையடுத்து மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டியொன்றில் ஏற்றிவிட்டுள்ளார். அத்தோடு அவர்களை இடையில் எங்கும் இறக்காது கொழும்பில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். அத்துடன் கொழும்பை வந்தடைந்த சிறுமிகள் ஐ.தே.க தலையகமான சிறிகொத்தாவுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

அதற்கு இடமளிக்கவில்லை பாதுகாப்பு அதிகாரி இதனையடுத்து அருகில் உள்ள ஜக்கிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு சென்று அங்கு சஜித் பிரேமதாசவை சந்திக்க முயற்சித்துள்ளனர். அங்கு சஜித் பிரேமதாச இருக்காத நிலையில் அவர்கள் பின்னர் உறவினர் ஒருவரின் வீட்டை வந்தடைந்த சிறுமிகள் அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர்.

இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவே அவர்கள் சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திக லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒற்றின் கீழ் அம் மூன்று சிறுமிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பிறகு வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக வெளியேறினால் இப்பிணையம் ரத்து செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்படுவார்கள் என்று இதன்போது நீதிவான் எச்சரித்தார். 

இந்நிலையில் இது குறித்து மேலதிக வழக்கு விசாராணைகள் நாளை 16 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31