கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறும் அறிவுரை

Published By: Digital Desk 4

15 Nov, 2021 | 10:11 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை புதிய அலையின் ஆரம்பம் என்று திடீரெனக் கூற முடியாது. எனினும் அவ்வாறு ஏற்படாது என்றும் உறுதியாகக் கூற முடியாது.

எனவே தற்போது சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்தால் எதிர்வரும் 10 - 15 நாட்களில் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்கள் திறப்பு குறித்து விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவிப்பது என்ன ? | Virakesari.lk

இதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரேயொரு விடயம் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதாகும். அவ்வாறில்லை என்றால் இதனை விடவும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதுள்ள நிலைமையை புதிய அலையின் ஆரம்பம் என்று திடீரெனக் கூற முடியாது. எனினும் அவ்வாறு ஏற்படாது என்றும் உறுதியாகக் கூற முடியாது.

காரணம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட எமது நடத்தையின் பிரதி பலனாகவே தற்போதைய நிலைமை காணப்படுகிறது. அதே போன்று தற்போதைய நடத்தைகளின் பிரதி பலனை எதிர்வரும் 10 - 15 நாட்களின் பின்னரே அவதானிக்க முடியும்.

அதற்கமைய கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள தொற்றாளர் அதிகரிப்பை தற்போது எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தற்போது சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்தால் எதிர்வரும் 10 - 15 நாட்களில் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.

இதற்காக நாம் செய்ய வேண்டிய ஒரேயொரு விடயம் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதாகும். அவ்வாறில்லை என்றால் இதனை விடவும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே சுகாதார விதிமுறைகள் எம்மால் வெளியிடப்படுகின்றன. எனவே அறிவுள்ள மக்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது பொறுப்புள்ள பிரஜைகளின் கடமையாகும். சமூகத்தில் அடையாளங்காணப்படாமல் உள்ள தொற்றாளர்களை இனங்காண்பதற்கான எழுமாற்று பரிசோதனைகள் முன்னரைப் போலவே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றன.

மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்காக வைத்தியசாலை கட்டமைப்புக்கள் தயார் நிலையிலுள்ளன. எவ்வாறிருப்பினும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. மாறாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை ஏதேனுமொரு வகையில் கட்டுப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00
news-image

ஊடக உயர்தொழிலாளர் பட்டய நிறுவக சட்டமூலத்திற்கு...

2026-08-07 22:33:48
news-image

மூதூர் படுகொலைகள் நிகழ்ந்து 20 வருடங்கள்...

2026-08-07 18:34:21
news-image

உயிரியல் பாட பரீட்சை வினாத்தாளில் பாரிய...

2026-08-07 22:28:49