'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற கொவிட் கொத்தணியை உருவாக்க எதிர்க்கட்சி முயற்சி - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 4

15 Nov, 2021 | 08:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு முரணாக போராட்டங்களை தீவிரப்படுத்தி எதிர்க்கட்சியினர் 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற  கொவிட் கொத்தணியை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

கொவிட் -19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்தால் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூற வேண்டும். சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் எதிர்தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுப்பது அவசியமாகும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: ரோஹித அபேகுணவர்தன | Virakesari.lk

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் கிராமங்களின் அபிவிருத்தியையும்,தேசிய உற்பத்திகளின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வரவு-செலவு திட்டத்தின் 65சதவீத பயன் கிராமங்களை இலக்காகக் கொண்டுள்ளது. கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் கொவிட் தாக்கத்தை எதிர்க் கொண்டுள்ளோம்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு பல சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டது அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்புக்களுக்கு மத்தியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் முன்வைக்கப்பட்டு;ள்ளது. நெருக்கடியான சூழ்நிலையை முகாமைத்துவம் செய்யும் வகையில் வரவு-செலவு திட்டத்தில் ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவி;ட் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்கத்தினரினதும், விவசாயிகளின் போராட்டங்களினாலும் மீண்டும் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ளது.

அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சியினர் கொழும்பை முற்றுகையிடுவதாக கூறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.

எதிர்தரப்பினர் 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற கொவிட் கொத்தணியை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இனிவரும் நாட்களில் கொவிட் தொற்று தீவிரமடைந்தால் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூற வேண்டும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்திற்கு முரணாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி...

2025-12-17 15:03:28
news-image

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-17 12:38:35
news-image

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை...

2025-12-17 14:58:54
news-image

காட்டு யானை மீது மோதி இரு...

2025-12-17 14:53:44
news-image

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க...

2025-12-17 13:57:34
news-image

கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச்...

2025-12-17 14:45:50
news-image

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் காலவகாசம் நீடிப்பு

2025-12-17 14:11:51
news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு...

2025-12-17 11:39:03