வர்த்தமானி அறிவித்தலை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் சட்டத்திற்கு முரணானவை - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Published By: Digital Desk 3

15 Nov, 2021 | 07:54 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார தரப்பினர் என்ற ரீதியில் நாம் பாரிய சிரமங்களுக்கு மத்தியில், அர்ப்பணிப்புடன் சேவையாற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள கொவிட் பரவலை , அரசியல் தேவைகளுக்காக மீண்டும் உக்கிரமடையச் செய்து விட வேண்டாம் என்று சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்பாட்டாளர்களிடமும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீறி முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடாகவே கருதப்படும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில் ,

ஐக்கிய மக்கள் சக்தியினரால் பெருமளவிலான மக்களை ஒன்றிணைத்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகிறதா அல்லது ஆதரவாக முன்னெடுக்கப்படுகிறதா என்பது சுகாதார தரப்பினரான எமக்கு தேவையற்றது.

எவ்வாறிருப்பினும் சுகாதார தரப்பினர் என்ற ரீதியில் நாம் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் , அர்ப்பணிப்புடன் சேவையாற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள கொவிட் பரவலை , அரசியல் தேவைகளுக்காக மீண்டும் உக்கிமடையச் செய்து விட வேண்டாம் என்று கோருகின்றோம்.

மிகுந்த நெருக்கடிக்கு மத்தியிலேயே கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையும் , மரணங்களின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை தொடர்ந்தும் பேணுவதற்கு முயற்சிக்குமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாட்டு மக்கள் ஓரளவிற்கேனும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்ற நிலையில் , அவர்களை அதனை மீறி செயற்படுத்துவதற்கு தூண்டும் வகையில் தவறான முன்னுதாரணமாக செயற்பட வேண்டாம் என்றும் கோருகின்றோம்.

சகல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடமும், செயற்பாட்டாளர்களிடமும் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்திற்கமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீறி முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடாகவே கருதப்படும்.

எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களின் சுகாதார நலன் மற்றும் பெறுமதி மிக்க உயிர் என்பவற்றை உதாசீனப்படுத்தி இவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08