பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையில் வரவு-செலவுத் திட்டம் அமையவில்லை : எமது கருத்துக்களை கேட்கிறார்களில்லை திஸ்ஸ விதாரண

Published By: Gayathri

14 Nov, 2021 | 08:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)


கொவிட் -19 வைரஸ் தாக்கம், வாழ்க்கை செலவுகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணிகளினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயனடையும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அமையவில்லை.


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கட்சி சார்பில் யோசனை முன்வைத்தோம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கதிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானதாகும்.


அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.

பாராளுன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்கள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட் தாக்கத்தினாலும், வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பினாலும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை எதிர்க் கொண்டுள்ளார்கள்.


பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க பயனடையும் வகையில் வரவு-செலவுத் திட்டம் அமையவில்லை என குறிப்பிடவேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு –செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சி சார்பில் யோசனை முன்வைத்தோம். எமது யோசனைகள் தொடர்பில் அரச தலைவர்கள் கவனம் செலுத்தும் விதம் கேள்விக்குறியது.


பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சு மட்டத்திலாவது நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துளோம்.


அரசாங்கத்தில் இருந்து லங்கா சமசமாஜ கட்சி வெளியேறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது.

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு உண்டு.


அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்

2026-04-12 15:28:24
news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப்...

2026-04-12 15:25:21
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38