வெள்ளத்தால் புத்தளத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்ச்செய்கை நாசம்

Published By: Gayathri

14 Nov, 2021 | 02:05 PM
image

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பெய்த கடும் மழையின் காரணமாக கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட நாவற்காடு, நரக்கள்ளி, நுரைச்சோலை, திகலி ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான பயிர்ச்செய்கை வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

தக்காளி, பயிற்றங்காய், சிறிய வெங்காயம், மிளகாய், கோவா, பீட்ரூட்,  ஆகிய பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்ததாகவும் பயிர் செய்கை அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் இதன்போது தெரிவிக்கின்றனர். 

இதன்போது வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எலுவாங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 ஏக்கருக்கு அதிகமான நெற்பயிர்ச் செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

ராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் குறித்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நகைகளை அடகு வைத்தும் வங்கிகளிள் நுண்கடன்களைப் பெற்றும் குறித்த விவசாயத்தை மேற்கொண்டு வந்ததாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டஈடுகளை வழங்குமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37