நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள்

Published By: Vishnu

12 Nov, 2021 | 08:52 AM
image

தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 டெங்கு நோயாளர்கள் மாத்திரம் பதிவாகியிருந்தனர். 

இந் நிலையில் இந்த ஆண்டு நவம்பரில் வெறும் 10 நாட்களுக்குள் பதிவான டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

இது இந்த ஆண்டு தொற்றுநோயின் அதிக தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

கொழும்பு, மட்டக்களப்பு, பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலே கணிசமான டெங்கு நோயாளர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே வெள்ளம் குறையத் தொடங்கும் போது ஏற்படும் ஆபத்தான நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்

  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02