ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுலாக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் பிரிட்டன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
நியுயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பிரிட்டன் பாராளுமன்ற செயலாளர் அலோக் சர்மாவும் இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுலாக்குதல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பையடுத்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள பிரிட்டன் பாராளுமன்ற செயலாளர் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பயனுள்ள சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்துகொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM