முத்துராஜவலையில் கிராமசேவகர் பிரிவுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கீழ் கொண்டுவந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - சுதர்ஷனி பெர்ணான்டொ புள்ளே

Published By: Digital Desk 3

10 Nov, 2021 | 11:51 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

முத்துராஜவலையை வன பாதுகாப்பு வலயமாக மாற்றுமாறு தெவிக்கும்போது அந்த பிரதேசத்தில் இருக்கும் பல கிராமசேசகர் பிரிவுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கீழ் கொண்டுவந்திருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

வன்மையாக எதிர்க்கின்றோம்  அந்த பிரதேசத்தின் மக்கள் பிரநிதிகளாகிய எம்மிடம்கூட இதுதொடர்பில் கலந்துரையாடவில்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டொ புள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் கணக்குகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முத்துராஜவல இந்த நாட்டின் வளம். பாரிய சதுப்பு நிலம். இந்த இடத்தில் பாரியளவில் சட்டவிராேத நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மணல் அகழ்வு, போதைப்பொருள் வியாபாரம், காணி நிரப்பு, காடழிப்பு இதுபோன்ற பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 

கார்தினால் மெல்கம் ரஞ்சித் இதுதொடர்பான பிரச்சினைகளை பல தடவைகள் வெளிப்படுத்தி இருந்தார். அதனால் முத்துராஜவலையை வன பாதுகாப்பு வலயமாக மாற்றவேண்டும் என தெரிவிக்கும்போது, முத்துராஜவலையை சுற்றி இருக்கும் பல கிராமசேவகர் பிரிவுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கீழ் கொண்டுவந்திருக்கின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்த பிரதேச மக்கள் எம்மிடம்  கேள்வி கேட்கின்றனர். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே எம்மை அந்த மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கின்றனர். 

நகர அபிவிருத்து அதிகாரசபையின் நடவடிக்கையால் அந்த பிரதேச மக்களுக்கு தொழில் ரீதியில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கின்றனர். 

கொவிட் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு, தற்போது சற்று தலைதூக்கும்போது, இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. மரத்தால் விழுந்தவனை மாடேறியதுபோலே இன்று அந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் இதுதொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழுவில் கதைத்திருக்கலாம். அந்த பிரதேச மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் எம்முடன் கூட இதுதொடர்பில் கலந்துரையாடவில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த தீர்மானத்துக்கு எதிராக அந்த பிரதேச மக்கள் வீதிக்கிறங்கி இருக்கின்றனர்.

மேலும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு நகரம் தொடர்பான தெளிவு இல்லை. அந்த பிரதேசத்தின் கலாசாரம் தொடர்பான எந்த அறிவும் இல்லாமலேயே செயற்படுகின்றனர். அந்த நகரத்தில் அபிவிருத்தி செய்யும்போது அந்த பிரதேசத்தின் கலாசார முக்கியத்துவங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். 

இது எதுவும் இடம்பெறாமலேயே நகர அபிவிருத்தி அதிகாரசபை செயற்படுகின்றது. அதனால் இந்த நடவடிக்கையை நாங்கள் மிகவும் வன்மையாக எதிர்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28