logo

முத்துராஜவெல அதிவிசேட வர்த்தமானியை இரத்து செய்யுங்கள் - நிமல் லன்சா வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

09 Nov, 2021 | 12:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முத்துராஜவெல சரணாலயத்தின் 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி  வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக அப்பிரதேச மக்கள் கலக்கமடைந்துள்ளார்கள். ஆகவே வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வெளியிடப்பட்ட அந்த அதிவிசேட வர்த்தமானி காரணமாக அப்பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.அதன் காரணமாக அப்பிரதேச மக்கள் பிரநிதியாகிய எனக்கும் தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு பகுதி என 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பிற்குள் சட்டவிரோதமான செயற்பாடுகள் இனி முன்னெடுக்கப்படும் என மெல்கம் கர்தினால் மற்றும் சமூக சுற்றாடற்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர. ஆகவே அந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பது அவசியமாகும்.

வன பகுதி, சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பகுதிகளை மாத்திரம் உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என இப்பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் வலியுறுத்துகிறேன். வர்த்தமானி அறிவித்தல் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளதுடன் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

சுமார் 150 வருட காலமாக இருந்த பள்ளிவாசல், விகாரை மற்றும் கோயில், காணி ஆகியவை வர்த்தமானி ஊடாக இல்லாமல் போகும் என அச்சமடைந்துள்ளார்கள்.

ஆகவே 1998 ஆம் ஆண்டு 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பு அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே அந்த நிலப்பரப்பை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26