புத்தளம் -முந்தல் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீன்பிடிப்பதற்காக முந்தல் குடியிருப்பு பகுதியிலுள்ள குளம் ஒன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற குறித்த நபர் அந்தக் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஒன்றுகூடி குளத்திற்குள் வீழ்ந்த குடும்பஸ்தரை பாதுகாப்பாக வெளியே எடுத்து, உடனடியாக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று அனுமதித்தபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM