மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு

Published By: Gayathri

09 Nov, 2021 | 09:38 AM
image

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்திற்குள் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பிலும், சுகாதார விதிமுறைகளை முற்றாக மீறி செயற்படும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணிவரையான 2 மணித்தியாலங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றி வளைப்பில் பேரூந்துகள், மக்கள் முகக்கவசம் அணிந்துள்ள முறைமை, காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகள், சில்லறை விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை கடைகள், ஏனைய சிறு விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இந்த சுற்றிவளைப்பிற்காக 478 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது 916 பேரூந்துகளும், 173 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளும், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 1,220 பல்வேறு விற்பனை நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாமல் பயணித்த 421 பேரூந்துகள், 60 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும், 495 விற்பனை நிலை உரிமையாளர்களுக்கும் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09