(எம்.மனோசித்ரா)
நாட்டில் இன்று திங்கட்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 19 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 875 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 13 ஆண்களும் 6 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 11 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
இன்று மாலை வரை 512 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 545 768 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 515 495 பேர் குணமடைந்துள்ளனர். 16 417 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.