சதொசவில் அத்தியாவசியப் பொருட் கொள்வனவின்போது எந்தவித பலவந்தமும் இடம்பெறுவதில்லை - அமைச்சர் பந்துல

Published By: Digital Desk 2

08 Nov, 2021 | 08:36 PM
image

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

அத்தியாவசிய 15பொருட்களுக்கான விலையை குறைத்து மக்களுக்கு குறைந்த விலைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அவ்வாறு இல்லாமல் நுகர்கோரை பலவந்தப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்

நுகர்வோர் வற்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு நுகர்வோரை வற்புறுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பில் வர்த்தக அமைச்சர் பதிலளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8 ) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வியின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,

சதொச நிறுவனத்தில் ஒருசில அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள சென்றால், அந்த பொருட்களை பெற்றுக்கொள்ள மேலதிகமாக ஐந்து பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என நுகர்வோர் பலவந்தப்படுத்தப்படுகின்றனர். 

யாராவது சீனி கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் சதொச நிறுவனத்துக்கு சென்றால், அவருக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்றது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு நுகர்வோரை பலவந்தப்படுத்தவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பில் வர்த்தக அமைச்சர் பதிலளிக்கவேண்டும் என்றார்

இதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன பதிலளிக்கையில், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் 15வகைகளின் விலை குறைக்கப்பட்டு சதொச ஊடாக மக்களுக்கு விநியோக்க தீர்மானித்தோம்.

அதில் அரிசி, சீனி, போதுமை மா, பருப்பு என பல பொருட்கள் அடங்குகின்றன. அந்த பொருட்களை வேறு மொத்த விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொண்டால் ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாகவே இருக்கின்றது. 

அதுதொடர்பான பற்றுச்சீட்டு ஒன்றையும் நான் ஊடக சந்திப்பின்போது காட்டினேன். அதன்போது சதொச ஊடாக இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளும்போது குறைந்தபட்சம் 5பொருட்களையாவது பெற்றுக்கொள்வதன் மூலம் நுகர்வோருக்கு அதிக நன்மை கிடைக்கின்றது என தெரிவித்தேன்.

என்றாலும் இதனை வேறுவிதமாக பிரசாரம் செய்ய சிலர் முயற்சித்தனர். அதாவது சீனி அல்லது அரிசி எடுப்பதாக இருந்தால் வேறு 5பொருட்கள் கொள்வனவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனால் மறுநாள் மீண்டும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, நுகர்வோருக்கு விரும்பிய பிரகாரம் சதொச ஊடாக பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். 

1998 என்ற துரித இலக்கத்துக்கு அழைத்தால் வீட்டுக்கே பொருட்களை கொண்டுவந்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றாேம் என தெரிவித்தேன். அதனால் யாருக்கும் எந்த வற்புறுத்தலும் இல்லை. நுகர்வோருக்கு தேவையான அத்தியாவசியமான 15 பொருட்களை சதொச ஊடாக குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-23 17:44:43
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07