(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுதல் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக அடிப்படை சுகாதாரக்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தல் என்பவற்றுக்காக இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாகக் கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 10 நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக உதவுவதற்கென கனேடிய அரசாங்கத்தினால் இவ்வருடம் மார்ச் மாதத்திலிருந்து 23.86 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுகாதார அமைச்சு மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகம் என்பன இணைந்து மேற்படி நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்திட்டமொன்றைத் தயாரித்தன. அச்செயற்திட்டத்தில் கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் சுகாதாரத்துறையில் மேலும் குறிப்பிடத்தக்களவான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு விசேடமாகக் கருத்திற்கொள்ளப்படவேண்டிய காரணிகள் தொடர்பில் குறிப்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
'கூட்டிணைவு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடலின் ஊடாக கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கு அவசியமான உதவிகளை இலங்கைக்கு எம்மால் உரியநேரத்தில் வழங்கமுடிந்திருக்கின்றது' என்று இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மெக்கினொன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அலகா சிங், 'கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியை உரியவாறு கையாள்வதுடன் அதிலிருந்து மீட்சியடையவேண்டிய நிலையில் இலங்கை உள்ளபோது கனேடிய அரசாங்கத்தினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதுமாத்திரமன்றி நிதியுதவியை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கையாள்வதில் எமக்கு வழங்கப்பட்ட சுதந்திரமும் பெரிதும் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்' என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM