ஜேர்மனியில் ரயில் கத்திக்குத்து : 3 பேர் காயம்

07 Nov, 2021 | 09:49 AM
image

ஜேர்மனியில் ரயிலில் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் அண்மைக் காலமாக பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு அவ்வப்போது  பயங்கரவாத ஆதரவு நபர்களால் தாக்குதல் நடத்தும் போக்கு காணப்படுகிறது. 

கடந்த ஜூன் மாதம் ஜேர்மனியின் வுர்பர்க் நகரில் சோமாலிய நாட்டை சேர்ந்த ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் ஐரோப்பிய  நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், ஜேர்மனியில் பவாரியா நகரில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் அவரின் நோக்கம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் அமீர்...

2026-04-16 17:25:24
news-image

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்...

2026-04-16 17:04:42
news-image

“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது...

2026-04-16 16:25:53
news-image

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250...

2026-04-16 18:27:55
news-image

ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லொரி...

2026-04-16 12:50:56
news-image

மொசாட் அமைப்பு தொடர்பான குற்றச்சாட்டு : ...

2026-04-16 12:06:23
news-image

தேர்தல் விதிமீறல் : விஜய் மீது...

2026-04-16 11:24:31
news-image

34 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் –...

2026-04-16 10:32:15
news-image

ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை ;...

2026-04-16 10:10:16
news-image

போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா...

2026-04-16 09:47:59
news-image

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான்...

2026-04-16 09:33:41
news-image

ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள்...

2026-04-16 04:43:22